ETV Bharat / bharat

ஓபிஎஸ் மனைவி மறைவு - தமிழிசை இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 1, 2021, 12:44 PM IST

தமிழிசை இரங்கல்
தமிழிசை இரங்கல்

புதுச்சேரி: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று (செப்.1) காலமானார். அவருக்கு வயது 63.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். குறிப்பாக சசிகலாவும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இரங்கல் குறிப்பு

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயலட்சுமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரி விஜயலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

புதுச்சேரி: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று (செப்.1) காலமானார். அவருக்கு வயது 63.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். குறிப்பாக சசிகலாவும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இரங்கல் குறிப்பு

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயலட்சுமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரி விஜயலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.